12-12-2008 | அவசிய அறிக்கை | Avasiya arikkai

176 பார்வைகள்
Nanni Chozhan
Nanni Chozhan
11 May 2021

⁣ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது படையினரை பல மைல் தொலைவுக்கு முன்னேற அனுமதித்த விடுதலைப் புலிகள் பின்னர் ஊடறுப்பு. முறியடிப்புத் தாக்குதலை நடத்தியபோது படையினர் சிதறியோட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கைகளில் விழுந்தன. அதேபோன்ற ஒரு நிலைமை இப்போதும் ஏற்படுமா என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது. அப்போது ஒரு முனையில் மட்டும் படையினரின் நகர்வு இருந்ததால் அதனை முறியடிப்பதற்கான தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளால் இலகுவாக வகுக்க முடிந்தது. ஆனால். இப்போதும் அது போன்ற ஒரு வியூகத்துடன்தான் விடுதலைப் புலிகள் காத்திருக்கின்றார்களா என்ற கேள்வியும் எழுப்பப் படுகின்றது.

மேலும் காட்ட

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது