Theeyinil Eriyaatha - தீயினில் எரியாத தீபங்களே

572 பார்வைகள்
தமிழன்
தமிழன்
11 Feb 2019

மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்கம்

தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் குமரப்பா, “திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தீருவில் வெளியில் தீயில் சங்கமித்து தமிழர் மனங்களில் நின்றிந்த விழுதின் வேர்கள்…….

லெப்.கேணல் குமரப்பா
லெப்.கேணல் புலேந்திரன்
கப்டன் கரன்
கப்டன் நளன்
கப்டன் மிரேஸ்
கப்டன் பழனி
லெப்.தவக்குமார்
லெப்.அப்துல்லா
லெப்.அன்பழகன்
2ம் லெப்.ரெஜினால்ட்
2ம் லெப் ஆனந்தகுமார்
சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று பன்னிரு வேங்கைகளில் தானும் ஒருவனாக……
கப்டன் ரகு
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

மேலும் காட்ட

0 கருத்துக்கள் Sort By

கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை

அடுத்தது